அழுகையும் ஓர் அழகு !
சந்தோஷங்கள்
காவியங்கள் ஆவதில்லை
மலை அழுதால் மழை
அது பூமிச் செழிப்பு
கரம் அழுதால் வியர்வை
அது கடும் உழைப்பு
கடல் அழுதால் முத்து
அது நல்ல விலை
மனம் அழுதால் கவிதை
அது எழுத்துக் கலை
கைகளை ஏந்தி
கடவுளை நினை
கண்ணீர்ச் சுரக்கும்
இதயக் கந்தையை
கசக்கிக் கட்டு
அர்த்தமுள்ள அழுகை
ஆத்மச் சலவவ
அழத் தொடங்கி
அழ வைத்து ஓய்வதுதானே
அற்ப கால் வாழ்க்கை ..?
அப்துல் கையூம்
உலா போகும்
நிலாப் பெண்
ஓய்வெடுக்கும்
ஒப்பனை மாடம்
தென்றல் தாலாட்டும்
பளிங்குத் தூளி
நட்சத்திரக் கூட்டத்தின்
ஒத்திகைக் கூடம்
மேகங்கள் தாகம் தீர்க்கும்
தண்ணீர்ப் பந்தல்
சூரிய அதிபரின்
வெள்ளை மாளிகை
அந்த
தாஜ்மகால் !!
அப்துல் கையூம்