Archive for the ‘ கையூமின் கவிதைகள் ’ Category

imagescaf024u3.jpg

தேடல்கள் .. ..

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

பூஜ்ஜியம்

அன்று
எண்களுக்கும் 
எனக்குமிடையே
காரசார விவாதம்

பூஜ்யத்திற்கு
எதிராக
எண்களெல்லாம்
அணிதிரள

இலக்கங்கள்
விளக்கங்கள் வேண்டி
தர்க்கங்கள் செய்தன

எத்தனை பூஜ்ஜியமோ
அத்தனையும் சேர்ந்தாலும்
பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான்
பொரிந்து தள்ளியது எண்கள்

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை

திறந்த மேனியாய்
நிராயுதபாணியாய்
ஒற்றையாய் நின்ற
உயர்வுமிக்க
பூஜ்ஜியத்தை
புகழ்ந்து பேசினேன்

பூஜ்ஜியமே ..

உன் வெற்றிடமும்
எனக்கு
முழுமையாகவே
தெரிகிறது.

காலியானவன் நீ
காலாவதி ஆகாதவனும் நீ

நிறைவும் நீ
நிர்மூலமும் நீ

சூன்யம் நீ
என்றார்கள்

சூத்திரதாரியே
நீதானென்ற
சூட்சமத்தை
அறியாதவர்கள்

நீ
ஒளிவு மறைவு
இல்லாதவன்

அதனால்தானோ
உன் மதிப்பு
உலகுக்குத் தெரியவில்லை?

உள்ளொன்று வைத்து
புறமொன்று
பேசுபவர்க்குத்தானே
உலகத்தில் மரியாதை?

ஒவ்வொருத்தரின்
வெற்றிக்கு பின்னாலும்
ஒருவர் உண்டாம்

இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

ஒன்றுமே இல்லாத உன்னாலே
உயரத்தில் அவர்களை
உட்கார்த்த முடிகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அகிலத்தில் உன்னை
அறிமுகம் செய்தது
ஒரு இந்தியன்தானாம்
 
அதனாலோ என்னவோ
உன் மேல் எனக்கு
அளப்பரிய பிரியம்
 
ஆன்மீகத் தேடல்
உன்னிலிருந்தே தொடங்குகிறது
உன்னிடத்தே முடிவடைகிறது

உருவமுள்ளவனும் நீ
உருவமில்லாதவனும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ

ஆக்கமும் நீ
அழிவும் நீ

உன்னை
முற்றும் உணர்ந்தவர்கள்
சூஃபிகள் ஆனார்கள்
துறவிகள் ஆனார்கள்
முனிவர்கள் ஆனார்கள்

அறியாதவர்கள்
பூஜ்யமாகிப் போனார்கள்

உன்னிலிருந்து
பிறந்ததுதான் பிரபஞ்சம்
உன்னிலேயே
முடிவடையும் அது திண்ணம்

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு

நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?

பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?

மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது

பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது

எண்களுக்கு மாத்திரம்
நீ தொடக்கமல்ல

எல்லாவற்றிற்கும்
நீதான் தொடக்கம்
எல்லாவற்றிலும்
நீ அடக்கம்

உன்னை
சூன்யம் என்றவர்களை
சுட்டுவிடத் தோன்றுகிறது

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

நன்றி : திண்ணை (17.1.2008)

தேடல்கள் .. ..

(மே 2006-ல் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தில் தேடல்கள் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதை)

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

இது அடுக்குமா..?

orator.jpg

வெள்ளையும்                                                  சள்ளையுமாய்                                                      வெளியே                                                            நடமாட்டம்.

சுத்தம்                                                           சட்டையில் மட்டும்                                           இருந்தென்ன லாபம் ?

சட்டைப்பைக்கு                                            சமீபத்திலுள்ள                                              சதைத்துண்டில் அல்லவா                                      வேண்டும் ?

மேடையில்                                                          அவருக்கு                                                            எடைக்கு எடை                                               நாணயமாம்.

அவரது                                                       நாணயத்திற்கு                                                    எடைக்கு எடை                                                        தரச் சொன்னால்

ஒரே ஒரு நாணயம்                                              தேறுவதே சந்தேகம்.

செப்படி வித்தையில்                                         சொல்லுவான்                                                  வாயிலிருந்து                                                          குருதி கொட்டுமென்று

இவர்களின்                                                              சொல் வித்தையில்                                                     வாய் திறந்தால்                                                வாக்குறுதிகள் அல்லவா                                    கொட்டுகிறது ?

ஏப்பம் விடுவது                                               இவர்களுக்கு                                                      எளிதான கலை.

மேடையில் சோடா ..                                             மற்றவை தெரிவதில்லை.

இவர்கள்                                                              துண்டு போடுவது                                                  தோளில் மட்டுமா ?

நாட்டையும்தான்                                              நம்மையும்தான்.

அடுக்கு                                                       இவர்களுக்கு பிடிக்கும்

அடுக்கு மொழிகள்

அடுக்கடுக்காய்                                                 பணக்கட்டு

அடுக்குமாடிக்                                                 கட்டிடங்கள்

இது                                                               அடுக்குமா என்று                                         கேட்காதீர்கள் ..!

          – அப்துல் கையூம்

எடை

astonaut.jpg 

நிலவில்                                                              மனிதன்                                                                   எடை                                                          இழப்பானாம்.

இதிலென்ன                                                   ஆச்சரியம் ?

நிலவே !

உன்னிடத்தில்                                                      என்னை நானே                                       இழந்திருக்கேனே.. ?

         – அப்துல் கையூம்

ஆயுட் கைதி

imagesca63moec.jpg                                                                         என்னருமை                                                                                    சட்ட வல்லுனர்களே ! 

வாழ்நாள் முழுவதும்                                                                      ஜாமினில்                                                                                                வெளிவரவே முடியாத                                                                        ‘தடா’ சட்டம்                                                                                      ஏதாவதிருந்தால்                                                                                        தயவு செய்து சொல்லுங் கள்.                                                     

கடந்து போன                                                                                   என்                                                                                               இளமைக்கால                                                                                                              இனிய நினைவுகளை                                                                       

இதயச் சிறையில்                                                                          இரும்பு விலங்கிட்டு;                                                                         

ஆசை தீர                                                                                அடைத்து வைத்து;

ஆயுள் கைதியாக்கி                                                                         அழகு பார்க்க வேண்டும் !          

          – அப்துல் கையூம்

கலவரப் பகுதி

police-riot.jpg 

கலவரப் பகுதியில்                                                                உன்                                                                             கன்னக் குழியையும்                                                 சேர்த்தாலென்ன ..?

களேபரம்                                                                        பற்றிக் கொண்டது                                                 எனக்குள்ளேயும் !

ரப்பர் குண்டுகளாய்                                                      கவசமேந்தா                                                                        என் இதயத்தை                                                       துளைத்தெடுக்கும்                                                                 உன் பொல்லாத                                                                கள்ளப் பார்வை !

‘கன்னி’வெடிகளாய்                                                               உன்                                                                            சின்னக் குறும்பு                                                         சிணுங்கள்கள் !

கண்ணீர்ப் புகையாய்                                                             உன் நினைவுகள்                                                                   என் மூச்சை முட்டும்

என் மனதுக்கு                                                                 எனக்கு நானே                                                           பிறப்பித்துக் கொண்ட                                                    ஊரடங்குச் சட்டம்

வன்முறை                                                                 தூண்டுதலை                                                              நிறுத்திவிடு; போதும்.

என்னை                                                                             என் கிடப்பில்                                                              அப்படியே                                                                        விட்டு விடு !

          – அப்துல் கையூம்

பொத்தான்

button.jpg 

சட்டை

பொத்தானே ! 

உன்

மார்பினில் மட்டுமா

ஓட்டைகள் ? 

எங்கள்

இ.பி,கோ.

சட்டத்திலும்தான். 

விவாக

ரத்தொன்றே தொழிலாக

வேசித்தனம் புரியும்

வழக்குரைஞர்களுக்கு 

பிரிந்தவைகளை

ஒன்றிணைக்கும்

உன்

பேராற்றலை சற்று

புரியும்படி எடுத்தியம்பு

                  அப்துல் கையூம்

தலையெழுத்து

scribble.jpg 

என்ன லிபியோ                                                     யாருக்கும் தெரியாது !                                     

எழுதியிருப்பது என்ன                                               எதுவுமே புரியவில்லை !                                                 

புரியாத மொழியில்                                               புலப்படாத கிறுக்கல்.                                               

எழுத்தே தென்படாமல்                                                அது என்ன மையோ..?                                            

எழுதியதை மாற்ற                                                  இயலாத மை அது.                                        

எழுதியதும் அவனே !                                            அழிப்பதும்அவனே !                                                       

பொய்ப்பிக்காத                                                         ‘மெய் எழுத்து’ அது.                                                ‘உயிர் எழுத்தும்’ அதுவே.                  

தலையெழுத்து

உயிரினங்களுக்கு                                         மட்டும்தானா? 

கான மயிலாட                                                   கண்டிருந்த வான்கோழியாய்                                    

மனிதனும் எழுத                                            முற்படுகிறான் 

மகிழ்வுந்துக்கு                                                          எண் பலகை ! 

ஊர்களுக்கு                                                    பின்கோடு ! 

மாவட்டங்களுக்கு                                          தலைவர்களின் பெயர் ! 

நேற்று                                                                  இவன் வைத்த                                                           என் வீட்டு எண்                                                      பழைய எண் ஆகி                                                    இன்று பரிணாமம்                                                       புதிய எண் ! 

ஆனால்                                                                  ஒரே ஒரு வித்தியாசம் ! 

அவனது மாறுவதில்லை;                                           இவனது மாறி விடுகிறது. 

          அப்துல் கையூம்             

பள்ளிப் பாடம்

barathiyar.jpg  

நாகூர்

செட்டியார் ஸ்கூலில்

நாயுடு சார்

நடத்துகிறார்

பாரதியார் பாடம்

“சாதிகள் இல்லையடி பாப்பா”

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com