Archive for January, 2008

imagescaf024u3.jpg

தேடல்கள் .. ..

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

உருளைகள்

prayer-beads.jpg 
தவசு மணி
ருத்திராட்சம்
ஜப மணி
ஜப மாலை
மிஸ்பாஹ்
தஸ்பீஹ்
ப்ரேயர் பீட்ஸ்
ரோசரி
பெயர்கள் வெவ்வேறு
நோக்கம் ஒன்று
உருளைகள்
கனத்தை இலகுவாக்கி
சுலபமாய்ஓட வைக்கிறதாம்
இது நியூட்டன் விதி
இந்த உருளைகள்
மனிதனை
இறைவனின்பால்
விரைவாய்
உருட்ட வைக்கிறது
முன்னது நியூட்டன் விதி
பின்னது ஆன்மீகத் துதி 
 
– அப்துல் கையூம் 
 

தேங்காப்பட்டணம்

வாழ்த்துரை

(14-10-2007 அன்று பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் போது யான் வாசித்தளித்த கவிதை)

ஒரு
மீனவக் குப்பத்தை
வானாளாவ உயர்த்திவைத்த
தீனோர்களுக்கு என் ஸலாம்

சாதிக்கென சங்கங்கள்
வீதிக்கொன் றிருக்கையிலே
ஆதியிலே அராபியரை
ஆரத் தழுவியதோர்

வேதமுறு மார்க்கமதாம்
சோதிமிகு இஸ்லாத்தை
ஆதியிலே – பாரத
மேதினியில் பரப்புதற்கு

காரணமாய் திகழ்ந்த
கடல் சூழ்ந்த இவ்வூர்க்கு
சங்கைமிகு இச்சங்கம்
சாலப் பொருத்தம்

என் ஆசான்
அப்துல் கபூர் அவர்களின்
உள்ளங்கவர் ஊர்
உங்கள் ஊர்

அந்த சந்தக்கவியை
நினைக்கையில் எல்லாம்
என் சிந்தையில் வந்து வந்து
இந்த ஊர் நிழலாடும்

வெள்ளித்திரை
வெற்றிகளுக்கே
வெற்றி விழா காணும்
வியாபார உலகில்

பழமை மிகு
பள்ளிக்கு பேர்போன
நல்லூரின் அமைப்புக்கு
இன்று வெள்ளி விழா !
மனந் துள்ளும் விழா!

தென்னைக்குள்
ஒளிந்திருக்கும்
இளநீருச் சுவைப்போல

தேங்கைக்கு
பல்வேறு
சுவைகள் உண்டு

இலக்கியத்தில்
இவர் பங்கு
ஏராளம் ஏராளம் !

இதற்கு
இன்பத்தமிழ் ஒன்றே
சான்றுரைக்கும் !

எண்ணற்ற அறிஞர்களை
ஈன்றெடுத்த பெருமைகள்
இவ்வூர்க்குண்டு !

பாலகவி
பக்கீர் சாகிப்
பாடிவைத்த
பாடல்களோ
பல நூறு .. ..

காலத்தால் அழியாத
காப்பியங்கள் வரலாறு.

குஞ்சுமூசா புலவரது
வாழ்த்து மாலை .. ..
குறையாத இன்பம் தரும்
இன்றும் நாளை.         

திருமலர் மீரான் முதல்
தேங்கை சர்புத்தீன் வரை
தீந்தமிழுக் காற்றியதோர்
மாபெரும் பங்கு.

மாலிக் இப்னு தீனாரின்
மகிமையினை பறைசாற்றும்
மாண்புகளை கூறிடவா?

‘அந்த அரபிக்கடலோரம்
உன் அழகைக் கண்டேனே !’ –என
அமுத கீதம் பாடிடவா?

‘நிங்கள்’ கேரளத்து நேசம்
உங்கள் பேச்சிலுண்டு வாசம்

தமிழுக்கு நீங்கள்
வார்த்த வார்த்தைகள்
வாசித்திட இயலாது ..!

கொசுவுக்கு ஒலுங்கென்று
சொல்லுவது
உங்களூரில் மட்டும்தான் !

– தேங்கா பட்டணம்
– தென்னை பட்டணம்
– தென் பட்டினம்
– தெற்கைபட்டினம்
– தர்ம பட்டணம்
– தேங்கை
– தேங்கையூர்
– குழந்தை நகர்

இவையாவும்
இவ்வூரின்
அழகுத் திருநாமங்கள்

– வண்டமிழ்
– தண்டமிழ்
– தீந்தமிழ்
– பைந்தமிழ்
– செந்தமிழ்
– இயற்றமிழ்
– இன்பத்தமிழ்
– முத்தமிழ்
– காவியத்தமிழ்

என்று விளங்கும்
எந்தமிழுக்கு
அடுத்தபடி ..

இத்தனை திருநாமங்கள்
இவ்வூருக்கு மட்டும்தான் !

வல்லிய பள்ளி .. .. ..!

விசாலம்
உங்கள் பள்ளியின்
பெயரில் மட்டுமல்ல

உங்கள்
மனதிலும்தான்.

இல்லாத குமர்களுக்கு
இல்வாழ்க்கை வகுப்பதுவும்;

கல்விக்கண் திறப்பதுவும்;
கரமுதவி நீட்டுவதும்;

மார்க்கப் பணிகளுக்கு
மனமுவந்து அளிப்பதுவும்;

பட்டியலிட்டாலும்
படித்து மாளாது.

நற்பணிகள் தொடரட்டும்;
நாயனவன் அருள்மழைகள்
நாள்தோறும் பொழியட்டும்.

அன்புடன்
அப்துல் கையூம்

பாங்கு சப்தம்

prayercall.jpg 

விசாலமற்ற மண்ணறையே

விலாசங்களாக மாற

மக்கிப்போன ஆடைகளினூடே

மரத்துப்போன என் தேகம்.

புழுக்களின் பிரவேசத்தில்

புழுக்கங்களின் பிரதேசத்தில்

புற்றாகிப்போன வெற்றுடல்.

ஊர்வனங்களின் ஊர்வலத்தில்

ஊர்வலமாய் வந்த நான்

கூறுகளாகி குதறியபிண்டமாய்

குரூரத்தின் சிதறலில்

உதிரங்கள் உறைந்து

உதிர்ந்தொழுகும் சடலமாகி

புரண்டுபடுக்கவும் நாதியற்று

அழுகும் நாற்றங்களில்

அசுத்தங்களே சுவாசங்களாக

பூச்சியின் கடைவாயில்

என் சின்னச் சின்ன

சதைத் துண்டுகள்.

நீட்டவும் மடக்கவும்

ஆட்டவே முடியாமல்

அசைவற்றுப் போன

நீர்த்துப்போன காற்றுப்பை.

கறையான்களுக் கிரையாகி

மேனியாவும் தீனியாக

கரைந்துருகும் மாமிசம்.

மயான பூமியில்

மணலரிப்புகளுக்கு ஏனோ

அவகாசமே இல்லாத

தலைபோகும் அவசரங்கள்.

இடைவெளி குறைந்து

எலும்புகள் நொறுங்க

துர்மணத்தின் வீச்சத்தில்

செத்த உடல்மீது

தத்தம் பணிகளை

நித்தம் புரியும்

சிற்றுயிர்கள்

சற்றே தளர்த்த

என்ன காரணமென

அண்ணாந்து நோக்க

ஆகாயத்தில் ஒலித்தது

“அல்லாஹு அக்பர்” என்ற

அழைப்புச் சப்தம்.

               – அப்துல் கையூம் 

ஆட்டம்

prayer.jpg 

விரலை ..                                                              

நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?                                                               நீட்டாமலே                                                      
தொழுவனுமா ?  
ஆட்டிக்கிட்டு                                                     
தொழுவனுமா ?                                                      
ஆட்டாமலே                                                      
தொழுவனுமா ?  
ஆட்டம் ..
முடிஞ்சு போகும்                                                       
முன்னாலே                                                                 
முதலில் சொல்லுங்க  
                                            
முடியாதபோது                                                                 
பெரிய தொல்லைங்க. கேட்டாலும்                                                              கேட்டீக ..                                                                       கேள்விகளை                                                          
போட்டீக ..  
வீட்டையுமே                                                         
ரெண்டாக்கி                                                                  
நாட்டையுமே                                                       
ரெண்டாக்கி போட்டியாக                                                          எங்களையும்                                                       
புறப்படத்தான்                                                           
வச்சீக ..  
இறப்பு ..                                                                         
எப்ப வரும் ?                                                                
ங்கே வரும் ?           
                                               
ஒண்ணும் தெரியலே !  
எப்ப உங்க                                                              
விவாதம் தீரும் ?                                                          
எதுவும் புரியலே !                                                             
நமக்கு தொழுகை                                                       
நடக்கும் முன்னே                                                             
நாம தொழுவணும்  
நாயனுக்கு                                                                
நன்றியினை                                                                 
நாளும் கூறணும்                                                       தொழுபவனே                                                                 
தொழ விடுங்க                                                              
அதுவே போதும்   
அப்புறமா வச்சிக்குங்க                                                    
உங்க                                                               
விதண்டாவாதம்.  
        
– அப்துல் கையூம்     

முஸல்லா

musalla.jpg

முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.

யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?

நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !

நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !

உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !

பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !

கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !

உன்னை
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !

உன் பார்வை – அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை

அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.

கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?

நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்

தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல

நீ என்
உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !

உன் தூண்டுதலினால்
நன்மைகளே எனக்கு
வருவாய் !

அன்றைய தினம்
நீயும் என்னுடன்
சாட்சி கூற
வருவாயாமே ..?

வருவாயா?
வருவாய்.

          அப்துல் கையூம்
 

பூஜ்ஜியம்

அன்று
எண்களுக்கும் 
எனக்குமிடையே
காரசார விவாதம்

பூஜ்யத்திற்கு
எதிராக
எண்களெல்லாம்
அணிதிரள

இலக்கங்கள்
விளக்கங்கள் வேண்டி
தர்க்கங்கள் செய்தன

எத்தனை பூஜ்ஜியமோ
அத்தனையும் சேர்ந்தாலும்
பூஜ்ஜியம் பூஜ்ஜியம்தான்
பொரிந்து தள்ளியது எண்கள்

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை

திறந்த மேனியாய்
நிராயுதபாணியாய்
ஒற்றையாய் நின்ற
உயர்வுமிக்க
பூஜ்ஜியத்தை
புகழ்ந்து பேசினேன்

பூஜ்ஜியமே ..

உன் வெற்றிடமும்
எனக்கு
முழுமையாகவே
தெரிகிறது.

காலியானவன் நீ
காலாவதி ஆகாதவனும் நீ

நிறைவும் நீ
நிர்மூலமும் நீ

சூன்யம் நீ
என்றார்கள்

சூத்திரதாரியே
நீதானென்ற
சூட்சமத்தை
அறியாதவர்கள்

நீ
ஒளிவு மறைவு
இல்லாதவன்

அதனால்தானோ
உன் மதிப்பு
உலகுக்குத் தெரியவில்லை?

உள்ளொன்று வைத்து
புறமொன்று
பேசுபவர்க்குத்தானே
உலகத்தில் மரியாதை?

ஒவ்வொருத்தரின்
வெற்றிக்கு பின்னாலும்
ஒருவர் உண்டாம்

இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

ஒன்றுமே இல்லாத உன்னாலே
உயரத்தில் அவர்களை
உட்கார்த்த முடிகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அகிலத்தில் உன்னை
அறிமுகம் செய்தது
ஒரு இந்தியன்தானாம்
 
அதனாலோ என்னவோ
உன் மேல் எனக்கு
அளப்பரிய பிரியம்
 
ஆன்மீகத் தேடல்
உன்னிலிருந்தே தொடங்குகிறது
உன்னிடத்தே முடிவடைகிறது

உருவமுள்ளவனும் நீ
உருவமில்லாதவனும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ

ஆக்கமும் நீ
அழிவும் நீ

உன்னை
முற்றும் உணர்ந்தவர்கள்
சூஃபிகள் ஆனார்கள்
துறவிகள் ஆனார்கள்
முனிவர்கள் ஆனார்கள்

அறியாதவர்கள்
பூஜ்யமாகிப் போனார்கள்

உன்னிலிருந்து
பிறந்ததுதான் பிரபஞ்சம்
உன்னிலேயே
முடிவடையும் அது திண்ணம்

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு

நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்

பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?

பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?

மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது

பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது

எண்களுக்கு மாத்திரம்
நீ தொடக்கமல்ல

எல்லாவற்றிற்கும்
நீதான் தொடக்கம்
எல்லாவற்றிலும்
நீ அடக்கம்

உன்னை
சூன்யம் என்றவர்களை
சுட்டுவிடத் தோன்றுகிறது

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

நன்றி : திண்ணை (17.1.2008)

தேடல்கள் .. ..

(மே 2006-ல் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தில் தேடல்கள் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் வாசித்தளித்த கவிதை)

தேடல்கள் புதிதல்ல..

வாழ்க்கையே நமக்கு
வரிசையாய் தேடல்கள்தானே?

இரையைத்தேடியும்
இறையைத் தேடியும்
இலக்கைத் தேடியும்
இலக்கங்களைத் தேடியும்
கலைந்து போகும் காலங்கள்

பிறந்த பொழுதிலிருந்து
தேடத் தொடங்குகிறோம்

தவிக்கின்ற பசிக்கு
தாயின் மார்புக்குள்
முகம் புதைத்து
மாய்ந்து மாய்ந்து
சேயொன்று
வாய் குவித்து
எதையோ தேடும் .. ..

தேடல் நாடகம்
அங்குதான் தொடக்கம்

மரணப் படுக்கையிலே
மல்லாந்து படுத்திருக்கும்
தகப்பனின் விழிகள் ..

சாகும் தருவாயில்
தேகம் உயிர்ப் பிரிய
கண்கள் வெளிர
கைகள் தளர
ஓடிக் களைத்திட்ட
உடற் சூடு தணிய
நாடி நரம்புகள்
ஆடி ஒடுங்கிட
மூச்சுக் காற்று
முனகலுடன்
பிரியமானவர்களை கண்டு
பிரியாவிடை கூறுதற்கு
கண்கள் அலைபாயும் .. ..

அது – ஒரு மனிதனின்
இறுதித் தேடல்

தேடலுக்கு எல்லை உண்டா?
என்றால் இல்லை ..
தேடலுக்கு வானமே எல்லை

தேடலுக்கு வயது உண்டா?
என்றால் இல்லை
தேடலுக்கு மரணமே எல்லை

வீடு போ.. போ.. என
விடை பகர
காடு வா.. வா .. என்
கரம் கொடுக்க
மண்ணறைக்குள்
மறையும் வரை
தொடரும் தேடல்

திருவிழா நெரிசலில்
திசைமாறிய சிறுவர்களை
வலைபோட்டு தேடும்
ஒலிபெருக்கி அறிவிப்பு
மட்டுமா தேடல்?

திக்குத் தெரியாத காட்டில் -உன்னை
தேடித் தேடி அலைந்தேனே என்று
கண்ணபிரானைத் தேடி
கவிதையிலே பொருள் வடித்த
கவிராஜன் பாரதியின்
தேடலும் ஒரு தேடல்

பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனை

இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம்தேடி
எங்கேயோ அலைகின்றாய்
ஞானத் தங்கமே என்று

பரம்பொருளின் தேடலை
பாட்டாக வடித்தானே
ஒரு ஞானக் கிறுக்கன்
அவன் தேடலும் ஒரு தேடல்

தேடும் நேயர் நெஞ்சங்களில்
குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும்
உணவளிப்பவன் என

பாறைக்குள் ஒளிந்திருக்கும்
தேரைக்கும்
பக்குவமாய் இரையை
பகிர்ந்தளித்தானே அந்த
முக்காலமும்அறிந்த
முழுமுதற் அரசன்

அவனைத் தேடுதல்
அது ஆன்மீகத் தேடல்

முகவரிகள் தொலைந்தனவோ
முகிலினங்கள் அலைகிறதோ
முகவரிகள் தொலைந்ததினால்
அது மழையோ? – இது ஒரு
தீந்தமிழ்க் கவிஞனின்
தேடல் கற்பனையின்
ஊடகப் படிமம்

தேடலும் ஒரு சுகம்

காதலாகட்டும்
கைகளின் சில்மிஷமாகட்டும்
கவிதையில் மறைந்திருக்கும்
கருத்தாழம் ஆகட்டும்

தேடலும் ஒரு சுகம்

ஆய கலைகள்
அறுபத்தி நான்கிலும்
தேடாத சுகங்கள்
ஆயிரம் உண்டு

எல்லா தேடலும் சுகமா?
என்றால் இல்லை …

சில தேடல்கள்
சில்லென்று ரத்தத்தை
உறைய வைக்கும் …
உள்ளத்தை உருக வைக்கும்
நெஞ்சை பிழிய வைக்கும்..
இதயத்தை நெகிழ வைக்கும்

புல்புல்கள் இசைக்கும்
காஷ்மீர மண்ணில்

மனதைக் கல்லாக்கி
மடிந்த உடல்களை
இடிந்த இடிபாடுகளiல்
ஒடிந்த கை கால்களோடு
விடிய விடிய ஒவ்வொன்றாய்
உருவி எடுத்தோமே – அது

உலகத்தை அழ வைத்த தேடல்

இறுதிப் பயணமென அறியாமல்
இரயில் பயணம் செய்தவரை

ஆந்திர மண்ணில்
ஆற்றில் தத்தளித்த
அகோர பிணங்களை
அலசித் தேடினோமே – அது

அனைவரையும்
அதிர வைத்த தேடல்

டிசம்பர் 26

கிளiஞ்சல்களைத் தேடிய
கடற்கரை மணலில்
கிழிந்துப் போன
மனித உடல்களைத்
தேடினோமே

அது அகிலத்தையே
அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின்
தேடலில் பிறந்ததுதான்
சிலப்பதிகாரம்

ஒரு சீதையின்
தேடலில் பிறந்ததுதான்
இராமாயணம்

ஒரு கணையாழியின் தேடலில்
காப்பியமானதுதான் சாகுந்தலம்

லைலாவைத் தேடிய
மஜ்னுவின் தேடல்
காதல் சாம்ராஜ்ஜியத்தின் – ஒரு
காப்பியத் தேடல்

ஞானத்தின் தேடலில்தான்
ஒரு சித்தார்த்தன்
புத்தனானான்

கலிங்கத்துப் போரில்
குருதி படிந்த மண்ணில்
தேடிய தேடலில்
சாம்ராட் அசோகன்
புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை
வர்ணங்களின் தேடல் வானவில்
வாலிபத்தின் தேடல் காதல்
வயிற்றுப்பசியின் தேடலே
வாழ்க்கையின் ஓட்டம்

யமுனை நதி தீரத்தில்
ஒரு சலவைக்கல் சங்கீதம்

அது மும்தாஜின் நினைவால் எழுந்த
ஒரு முகலாய அரசனின் தேடல்

காதல் தோல்வியென்றும்
கடன் தோல்வியென்றும்
காரணங்கள் காட்டி

மரணத்தின் தேடலில்
மடிந்த கோழைகள்தான்
எத்தனை எத்தனை?

ஜீவியும், விஜியும், சில்க்கும்
ஷோபாவும், மோனலும்

தவறான தேடலின்
சரியான உதாரணங்கள்

எல்லோரும்
எங்கேயோ
எதையோ ஒன்றை
எப்போதும் தேடுகிறோம்

இழப்பினாலும் தேடல் வரும்
தேவையினாலும் தேடல் வரும்

வாழ்க்கையே தேடல்
தேடலே வாழ்க்கை

மண்ணைத் தேடியதில்
கண்டது வைரம்

கடலைத் தேடியதில்
கிடைத்தது முத்து

விடியல்களைத்தேடும்
முதிர்க் கன்னிகள்

முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கொண்டு
முழுமையான பாசத்தை தேடும்
முதுமையுற்ற பெற்றோர்கள்

புன்னகையை தனக்குள் தேடும்
பொட்டிழந்த இளம் விதவைகள்

ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
ஒவ்வொருத்தனின் தேடல்தானே

அரசியல்வாதிகளiடம்
ஓழுக்கத்தை தேடுகிறோம்
அகப்படவில்லை

தேர்தலில்
நியாயத்தை தேடுகிறோம்
தென் படவில்லை

மனிதனிடம்
மனித நேயத்தை தேடுகிறோம்
மருந்தளவும் கிடைக்கவில்லை

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com