டாக்டர் ஈரோடு தமிழன்பன்
அந்த நாள் ஞாபகம்
வாழ்த்துரை
அந்த நாள் ஞாபகம்
வாழ்த்துரை
இது ஒரு –
புதுவகைத் தலபுராணம்!
– டாக்டர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது. குலாம் காதிறு நாவலரின் கொள்ளுப் பேரன் என்று இவரைத் தமிழும் அணைத்துக் கொள்ளுகிறது.
இது ஒரு புதுவகைத் தலபுராணம். ஊரும், மக்களும், வாழ்வும், வரலாறும் பொய்முகம் காட்டாமல் நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிற விந்தை இதனுள் நிகழ்ந்துள்ளது.
உணவு வகை, உடை வகை, உறவு வகை, எல்லாம் தெள்ளிய தமிழ்நடையில் உலா வருவதோடு ஊரின் வரலாற்றில் ஒளிவிளக்குகளாய்ச் சுடர்விடும், புலவர்கள், புரவலர்கள், மருத்துவர்கள் முதல் அடையாளப்பட மாட்டோமா என ஏங்கும் எளிய நிலை மாந்தரும் சமநிலையில் சித்தரிக்கப்படுவதை இந்நூலின் தனிச்சிறப்பாக என்னால் எடுத்து மொழிய முடியும்.
நாகூர் மக்களுக்கே உரிய சொல்வழக்குகளும் உயிர்த் துடிப்போடு – இச்சிறுநூலைச் சிறந்த நூலாக்கி இயக்குகின்றன.
இந்நூலைப் படிக்கிறவர்களுக்கெல்லாம் ஆசை ஒன்று இப்படி அரும்பும் –
‘நம் ஊரையும் இப்படியொருவர் பாட்டில் படம் பிடிக்க மாட்டாரா?
நம் முகமும் இதில் இடம் பெறாதா ..?’
நல்வாழ்த்துக்களுடன்
தமிழன்பன்
அரிமா நோக்கு – காலாண்டிதழ்
No trackbacks yet.