நெற்றிப் பட்டம்
பட்டுக் குஞ்சம்
பொன்னாடை போர்த்தி
மணி அலங்காரம்
வேளா வேளைக்கு
கவளச் சோறு
ஏ .. அங்குசக்காரா !
திக்குத் தெரியாத காட்டில்
தேடித் தேடி தினம்
அம்மணமாய் ஓடி
அலைந்து திரிந்தேனே
அது எவ்வளவோ மேல்.
கயிறு பிளிறியது
காலிலே பாவம்
கனத்த சங்கிலி
– அப்துல் கையூம்
No trackbacks yet.