Archive for November, 2007

இது அடுக்குமா..?

orator.jpg

வெள்ளையும்                                                  சள்ளையுமாய்                                                      வெளியே                                                            நடமாட்டம்.

சுத்தம்                                                           சட்டையில் மட்டும்                                           இருந்தென்ன லாபம் ?

சட்டைப்பைக்கு                                            சமீபத்திலுள்ள                                              சதைத்துண்டில் அல்லவா                                      வேண்டும் ?

மேடையில்                                                          அவருக்கு                                                            எடைக்கு எடை                                               நாணயமாம்.

அவரது                                                       நாணயத்திற்கு                                                    எடைக்கு எடை                                                        தரச் சொன்னால்

ஒரே ஒரு நாணயம்                                              தேறுவதே சந்தேகம்.

செப்படி வித்தையில்                                         சொல்லுவான்                                                  வாயிலிருந்து                                                          குருதி கொட்டுமென்று

இவர்களின்                                                              சொல் வித்தையில்                                                     வாய் திறந்தால்                                                வாக்குறுதிகள் அல்லவா                                    கொட்டுகிறது ?

ஏப்பம் விடுவது                                               இவர்களுக்கு                                                      எளிதான கலை.

மேடையில் சோடா ..                                             மற்றவை தெரிவதில்லை.

இவர்கள்                                                              துண்டு போடுவது                                                  தோளில் மட்டுமா ?

நாட்டையும்தான்                                              நம்மையும்தான்.

அடுக்கு                                                       இவர்களுக்கு பிடிக்கும்

அடுக்கு மொழிகள்

அடுக்கடுக்காய்                                                 பணக்கட்டு

அடுக்குமாடிக்                                                 கட்டிடங்கள்

இது                                                               அடுக்குமா என்று                                         கேட்காதீர்கள் ..!

          – அப்துல் கையூம்

எடை

astonaut.jpg 

நிலவில்                                                              மனிதன்                                                                   எடை                                                          இழப்பானாம்.

இதிலென்ன                                                   ஆச்சரியம் ?

நிலவே !

உன்னிடத்தில்                                                      என்னை நானே                                       இழந்திருக்கேனே.. ?

         – அப்துல் கையூம்

ஆயுட் கைதி

imagesca63moec.jpg                                                                         என்னருமை                                                                                    சட்ட வல்லுனர்களே ! 

வாழ்நாள் முழுவதும்                                                                      ஜாமினில்                                                                                                வெளிவரவே முடியாத                                                                        ‘தடா’ சட்டம்                                                                                      ஏதாவதிருந்தால்                                                                                        தயவு செய்து சொல்லுங் கள்.                                                     

கடந்து போன                                                                                   என்                                                                                               இளமைக்கால                                                                                                              இனிய நினைவுகளை                                                                       

இதயச் சிறையில்                                                                          இரும்பு விலங்கிட்டு;                                                                         

ஆசை தீர                                                                                அடைத்து வைத்து;

ஆயுள் கைதியாக்கி                                                                         அழகு பார்க்க வேண்டும் !          

          – அப்துல் கையூம்

கலவரப் பகுதி

police-riot.jpg 

கலவரப் பகுதியில்                                                                உன்                                                                             கன்னக் குழியையும்                                                 சேர்த்தாலென்ன ..?

களேபரம்                                                                        பற்றிக் கொண்டது                                                 எனக்குள்ளேயும் !

ரப்பர் குண்டுகளாய்                                                      கவசமேந்தா                                                                        என் இதயத்தை                                                       துளைத்தெடுக்கும்                                                                 உன் பொல்லாத                                                                கள்ளப் பார்வை !

‘கன்னி’வெடிகளாய்                                                               உன்                                                                            சின்னக் குறும்பு                                                         சிணுங்கள்கள் !

கண்ணீர்ப் புகையாய்                                                             உன் நினைவுகள்                                                                   என் மூச்சை முட்டும்

என் மனதுக்கு                                                                 எனக்கு நானே                                                           பிறப்பித்துக் கொண்ட                                                    ஊரடங்குச் சட்டம்

வன்முறை                                                                 தூண்டுதலை                                                              நிறுத்திவிடு; போதும்.

என்னை                                                                             என் கிடப்பில்                                                              அப்படியே                                                                        விட்டு விடு !

          – அப்துல் கையூம்

P – 108

p-108.jpg 

எழுந்ததும்                                             எழாததுமாய்                                                                     

உச்சந் தலையில்                                                          கொண்டை போட்டு                                                            

குலுக்கி மினுக்கி                                                             குனிந்து நிமிர்ந்து 

கெண்டை ஏற                                                              தொண்டை கிழிய                                                                 

மச்சு மீது                                                                         உச்ச ஸ்தாயியில்                                                          

அப்படியென்ன ஒரு                                                           காட்டுக் கத்தல்?                                                             

நடையைப் பார் .. ..  

கதிரவனை எழுப்பிய                                                             கர்வ மிடுக்கோ?           

          – அப்துல் கையூம் 

P – 109

bharathi.jpg 

பாரதியே ..                                                     பார்த்தாயா..?                                                            பைந்தமிழில் உன்                                                            பாடலை படித்துவிட்டு                                             பாட்டெழுதுகிறானாம் 

“காணி நிலம் வேண்டாம்                                                        காணி நிலம் வேண்டாம்                                                            

என் காதலியின்                                                   தலையணையில்                                                                   கால் துண்டு                                                                               இடம் எனக்கு                                                                 போதும் காளி ..” என்று

          – அப்துல் கையூம்

நூலாசிரியர் அறிமுகம்

nizam-passport.jpg

 M.G.K. NIZAMUDDIN Ex.MLA  (Nagappattinam Constituency)

  •  கவிஞர் அப்துல் கையூம் கடந்த 29 வருடங்களாக பஹ்ரைனில் வசித்து வருபவர்.

  • தன் நகைச்சுவை பேச்சாலும், எழுத்துக்களாலும் தனக்கென ஒரு பாணியைக் கையாள்பவர்

  • நல்ல படைப்பாளி.  பற்பல நாடகங்களை பஹ்ரைனில் தொடர்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.

  • கவியரங்குகளிலும், பட்டிமன்றத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.

  • பஹ்ரைனில் தமிழ்ச் சமுதாயத்திற்கென ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு மூலக் காரணமாக இருந்தவர்.

  • பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டவர். இவரது கவிதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.

  • “போன்சாய்”. “அந்த நாள் ஞாபகம்”  போன்ற கவிதை  நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 

– எம். ஜி.கே. நிஜாமுதீன்

L.L.B. D.G.  Ex. MLA

அந்த நாள் ஞாபகம் – ஒரு கண்ணோட்டம்

babu-chicha2.jpg

“அந்த நாள் ஞாபகம்” – இது நாகூரை பற்றி, நாகூர் மக்களுக்காக, நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை.  இதிலுள்ளவை நாகூரில் வாழ்ந்த, வாழும் அனைவருக்கும் தெரியும். ஆனால் உன் வண்டல் மண் மனது தான் நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சம் ஆக்கியிருக்கிறது.  

நீ சொல்லிய அனைத்தும், நீ சொல்ல மறந்த தூய தமிழ்ச்சொல்லாம் “மறுசோறு”, சுவையான தாளுச்சா, எங்கும் காணமுடியாத “சீனிதுவையல்” , அதுவும் வாழைப்பழமும், புலவு சோறும் சேர்ந்து சஹானில் உருவாகும் “பஞ்சாமிர்தக்குளம்”, அதை நால்வர் பங்கு போட்டுக் கொள்ளும் பாங்கு, அரை அடி விட்டமுள்ள “ஜாங்கிரி”, ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் ஆஸாத், யூசுப் – பட்டரைகள்.  யாசகம் கேட்டுக் வருபவர்களிடம் கூட மாஃப் செய்யுங்கள் (மன்னியுங்கள்) என்று மரியாதை செய்யும் பண்பு அத்தனையும் ‘பிளாஷ்பேக்” ஆக “ஞாபகம் வருதே”.

உன் எழுத்தில் அழகும் உண்டு. “வெள்ளியிலே தகடு செய்து ஏய்ப்போர்” என்று கூறும் தைரியமும் உண்டு.

நாகூர் மண்ணை சுவைத்து பின் அசைபோட்டு ரசிக்கும் நீதான் நாகூரின் மண்ணின் மைந்தன். நீ மலராகி மணம் வீசும் போது மற்றவர்கள் ரசிக்கிறார்கள். நீ கிரெசன்ட் பள்ளியில் மொட்டாக இருக்கும்போதே  நான் ரசித்தேன். நீ முளையிலேயே தெரியும் விளையும் பயிர்.

உன்னை கவிஞர்கள், நண்பர்கள்,  நீ அடையாளம் காட்டிய அனைவரும் பாராட்டுகிறார்கள்  ஆனால் உன் ஒவ்வோர் அசைவிலும் ஆனந்தம் கண்ட உன் பாட்டி – என் தாயார் – உன்னைப் பார்த்து மகிழ, பாராட்ட இல்லாதது உன் துரதிஷ்டமே …! 

என்ன..  உன் கண்ணீர் கன்னத்தில் உருண்டோடி வாய்க்குள் விழுந்து இனிக்கிறதா ..? அது பாசத்தின் கண்ணீர். இனிக்கத்தான் செய்யும். எனக்கும் அது இனிக்கிரது.. இதை எழுதும் போது.

டாக்டர் அ.அப்துல் ரஜாக்

பெருந்துறை – 17.07.2007

போன்சாய் – டாக்டர் அப்துல் ரஜாக்

babu-chicha.jpg  
“போன்சாய்” கவிஞனுக்கு …  
உன் குட்டிக் கவிதைகளை படுக்கையில் சாய்ந்து படிக்க ஆரம்பித்தேன். “தலைப்பின்றியே போகட்டும் என் கவிதை” என்றாய். இது முதல் பக்கத்திலேயே உன் முகவரி காட்டும் “நெத்தியடி”. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்; “போன்சாய்” படித்து முடிக்கும் வரை.  உன் தமிழ் ஆர்வம் எனக்குத் தெரியும். அது நீரு பூத்த  நெருப்பு என்று அறிந்தேன். உன் கவிதைகள் அனைத்தும் தேன் துளிகள் . அதில் நான் அதிகம் சுவைத்தவை : 
  • டை – அசால்டாய் தொங்கும் ஆங்கில கோவணம்
  • கொடியும் குண்டூசியுமாய் குத்த இடம் தேடும் வெற்று மேனிச் சிறுவன்
  • இந்தியத் தாய்க்கு கல்லறை எழுப்பிவிட்ட கற்களை சுமந்து வந்த கர சேவகர்கள்
  • புதியதொரு நிறமொன்றை கண்டு பிடியுங்கள்  – புதிய கட்சி தொடங்க
  • கல்யாண வீடுகளில் காலணிகளின் கூட்டணி மாநாடு
  • தலைமேட்டில் மைல்கல் – ஓடிய காலத்து மைலேஜ் கணக்கு
  • சிலந்தி வலை பற்றிய வருணனை
  • சத்துணவு ஆயாவின் சொத்தைப்பிள்ளை
  • கண்ணாடிக் கல்லறை  – இன்னும் எவ்வளவோ .. ..
அது சரி. முண்டாசுக் கவிஞனின் மீசையைப் பார்த்துமா உனக்கு மீசை மேல் வெறுப்பு..?  மீசையா முத்தத்தின் எதிரி..? மீசை செய்யும் குறும்பின் சுவையை நீ அறியமாட்டாய்.  உன் கிறுக்கல்கள் இதய ‘ஈ.ஸி.ஜி.’ மட்டுமல்ல. உன் இதய ‘எக்கோ’  மற்றும் ‘ஆஞ்சியோகிராமும்’ அதுதான். நீ ஆரிப் நாவலரின் அடுத்த வீட்டுக்காரன் என்பது நிரூபணம்.  28 – ஆண்டுகள் பஹ்ரைனில் புதைத்து வைத்த உன் எண்ணங்கள் என்ற கரித்துண்டுகள் “போன்சாய்” வைரங்களாய் மாறியதோ..?
– டாக்டர் அ.அப்துல் ரஜாக்
பெருந்துறை – 17.07.2007

 

டாக்டர் அப்துல் ரஜாக்கின் ஒரு சில கவிதைகள் :

ஆளுயர  கட்-அவுட் 
அர்ச்சனை
ஆராதனை
அபிஷேகம்
          நடிகருக்கு பிறந்த நாள் இன்று
          நாட்டிற்கு விமோசனம் என்று ?
_____________________________________________________________
அன்பளிப்பு
மாமூல்
சம்திங்
ரேட்
          காரியங்களை கை கூட வைக்கும்
          கரன்சியின் புனைப்பெயர்கள்
____________________________________________________________
கருப்புப் பணம்
மஞ்சள் பத்திரிக்கை
பச்சையான வசனம்
நீலப்படம்
சிவப்பு விளக்குப் பகுதி
          பிஞ்சிலே பழுத்த மாணவன்
          சொன்ன நிறங்களின் உதாரணம்
___________________________________________________________
ஆசையுடன் அழைத்தேன்
அருகில் வரவில்லை
கோபத்துடன் கூப்பிட்டேன் – அவள்
குணம் மாறவில்லை
அடித்தும் பார்த்து விட்டேன்
அலட்சியம் செய்கிறாள்
ஆனால்
விசிலடித்தது குக்கர்
விரைந்து ஓடுகிறாள்
என் மனைவி
____________________________________________________________
கழுத்திலே சுறுக்கு
கால்களில் கணம்
முதுகிலே மூட்டை
மூளையிலே பாடங்கள்
          ஆட்டோவில் திணிக்கப்பட்டு
          அல்லல்பட்டு அவதிப்பட்டு
          ஊர்சுற்றி உடல்சோர்ந்து
அப்பாடா ! தரையிறங்கி விட்டாள்
எங்கள் வீட்டு சுனிதா வில்லியம்ஸ்
 ___________________________________________________________
ஆங்கிலத்தேதி தமிழ்த்தேதி
அமிர்தயோகம் அஷ்டமி
ராகுகாலம் ராசிபலன்
நல்லநாள் நகசு
அத்தனையும் காட்டுகிறேன்
          கருணையின்றி கிழிக்கிறாயே தினம்
          காலண்டர் என்று
___________________________________________________________
டாக்டர்தான் ஆக வேண்டும் – அம்மா
இஞ்ஞினியர் என் ஆசை – அப்பா
கலெக்டர்தான் என் கனவு – அக்கா
வக்கீல் ஆனால் என்ன ? – தம்பி
          எல்லோரையும் திருப்திபடுத்த
          நான் நடிகனாகி விட்டேன்
_____________________________________________________________
பகல் முழுதும் உழைப்பு
பிளாட்பாரத்தில் படுக்கை
அருகிலே ஆரணங்கு
அழகான என் குழந்தை
நிம்மதியான நித்திரை
நாளைக்கு என்ன நடக்கும்?
நானறியேன். ஆனாலும்
கடவுளை வேண்டினேன் – நான்
பணக்காரன் ஆக வேண்டாம்
தூக்கமில்லாமல் புரளும்
துன்பம் வேண்டாம்
நாடி நரம்புகளை வருத்தும்
நோய்கள் வேண்டாம்
பணத்திற்காக சிரிக்கும்
பந்தம் வேண்டாம்
பாசமே இல்லாத
பிள்ளைகள் வேண்டாம்
ஏழையாய் வாழவே
ஏங்குகிறேன் இறைவா
ஏழையாய் சாகவே
வேண்டுகிறேன் நானும் !
____________________________________________________________

P – 110

p-110.jpg 

என்னதான் கோளாறோ? 

இளமையிலேயே வழுக்கை 

இளநீருக்கு

          – அப்துல் கையூம்