ஒளவை சொன்ன மொழியாம்
ஆத்திச் சூடி
ஒளவையே ..!
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா? என்று
சொல்லாட்சி செய்தவளே..!
காந்தி தேசமென்று
கவிஞன் சொன்னதும்
நீ தானம்மா
என்
நினைவில் வந்தாய்.
அன்று
மகாத்மா காந்தி;
அப்புறம்
இந்திரா காந்தி;
அடுத்து
ராஜிவ் காந்தி
சுட்ட பழங்களாக
அல்லவோ
சுருண்டு விழுந்தார்கள்..?
அப்துல் கையூம்
No trackbacks yet.